குழந்தைகளின் உலகம் விசித்திரமானது.கவலையில்லாமல் கனவுகளையும் விடாப்பிடிவாதத்தையும் தன் மனதில் வைத்துக்கொண்டு வாழ்கின்றவர்கள். அப்படிப்பட்ட குழந்தை தான் அகிலாவும். வயது 6,காலை வேளையில் பள்ளிக்கு வெள்ளைச் சீருடை அணிந்து வெண்புறா போல் சென்றாள் .
அன்று அவள் தோழி ஷர்மிக்கு பிறந்தநாள். அகிலா வாழ்த்துக்களைக் கூற, தன் தந்தை வெளிநாட்டுப் பயணத்தின் போது வாங்கிய சாக்லேட்டைக் கொடுத்தாள் ஷர்மி. "ஏன் ஷர்மி இது வெளிநாட்டு சாக்லேட்டா, நீ வெளிநாட்டுக்கெல்லாம் போயிருக்கியா" என்று ஆதங்கத்துடன் கேட்டாள் அகிலா. ஷர்மியும் விளையாட்டுத்தனமாக கூறினாள், "ஆமா , நாங்க போன வருஷமே போனமே!". அவ்வளவுதான், அகிலாவிற்கு தொற்றிக்கொண்டது வெளிநாட்டு மோகம் .
வீட்டிற்கு வந்த அவள் மூலையில் உட்கார்ந்தாள் கண்ணைக் கசக்கிக்கொண்டு. "என்னடி அழுகிற" என்று அம்மா மரகதம் கேட்க, "வெளிநாட்டிற்கு எப்பம்மா போவோம்" என்று அகிலா கேட்டாள். வந்தது கோபம் மரகதத்திற்கு, "ஏண்டி திமிரு பிடுச்சு போச்சா சாப்பாட்டுக்கே வழி இல்ல இதுல வெளிநாட்டுக்கு வேறயா" என்று பேசிவிட்டு தன் வேலையைக் கவனித்தாள்.
அகிலா அழுதுகொண்டிருக்க, அவள் அப்பா சண்முகம் வீட்டிற்குள் நுளைந்தான். விஷயம் தெரிந்தும் அகிலா மேல் உள்ள பற்றால் அடிக்காமல் அனைத்தான் மார்போடு. நள்ளிரவு 2 மணி அகிலாவிற்கு ஒரே காய்ச்சல் சும்மா தீப்பிடிச்சு எரிஞ்ச மாதிரி இருந்தது உடம்பு. அந்த வேதனையோடும் புலம்பிக்கொண்டு இருந்தாள், வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்று .
அந்த நேரத்தில் அலரிக்கொண்டு டாக்டரிடம் காண்பித்தார்கள். அவர் "காய்ச்சலை குணப்படுத்துறது என் கையில ஆனா அகிலாவின் ஆசை உங்க கையிலதான்" என்று சொல்லிட்டாரு. ஊசிப் போட்டுக் கொண்டு, மாத்திரையும் வாங்கிவந்தர்கள். அவளும் எந்திருச்ச பாடுயில்ல. முடிவு பண்ணினான் சண்முகம், மனைவியிடம் பணம் பெற்றுக்கொண்டு போனவன் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தவிச்சு போனாள் மரகதம்.
மாலை 6 மணி இருக்கும் ஒரு வழியா வந்தான் சண்முகம் கையில் பையுடன். அகிலாவை கூப்பிட்டான், "எந்திரிம்மா, அப்பா ஒனக்கு வெளிநாட்டைச் சுத்தி காட்றேன்" என்று கூற, எந்திரிக்கவேயில்லை. அகில்லலலலானு.... கத்திட்டான். மரகதமும் கத்த வீடே சோகத்தில் மூழ்கியது. பையில் உள்ள பொருளை கையில் வைத்துக்கொண்டு அகிலா என்று சோகக் குரலில் மீண்டும் கூப்பிட, இமைகளை மெல்ல திறந்தாள் அகிலா. கையில் உலக உருண்டையை சுற்றிக்கொண்டு இருந்தான் சண்முகம்.........
"அப்பா நம்ம இப்ப அமெரிக்கா போவோமா சர்ரு.. சர்ரு... சர்ரு".. அகிலாவும் சண்முகமும் அமெரிக்காவை அடைந்தார்கள் ..
"அகிலா இப்ப நம்ம ஜப்பான் போகப்போறோம் .." என்று சண்முகம் சொல்ல ,
"அங்க வேணாம்ப்பா சுனாமியல்லாம் வரும்மாமே எங்க
"அகிலா இப்ப நம்ம ஜப்பான் போகப்போறோம் .." என்று சண்முகம் சொல்ல ,
"அங்க வேணாம்ப்பா சுனாமியல்லாம் வரும்மாமே எங்க
டீச்சர் சொன்னாங்க " .................
இப்படி, கனவு உலகில் பயணித்துக் கொண்டுயிருக்கிறார்கள் அப்பாவும் மகளும் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக