மதுரை தமுக்கம் மைதானத்தில் மேஜிக் ஷோ நடந்தது. மேஜிக்கைக் காண மக்கள் படை எடுத்து வந்தார்கள். காரணம், மேஜிக் சைக்கிளில் ஏறி, கண்ணை மூடி, எந்த இடத்திற்கு போகனுமுனு நினைக்கிறமோ? அந்த இடத்தை அடையளாம். 50 ரூபாய்க்கு உலகத்தைச் சுத்திப் பார்க்கும் போது கூட்டம் வராதா என்ன?
திருடுரதையே வேலையா வச்சுகிட்டு இருந்தான் சிவா. அன்னா நகரில் ஒரு வீட்டில் சிவா திருடிட்டு வெளியே வரும் போது, எப்படியோ போலீஸுக்குத் தகவல் தெரிந்து, சுத்தி வளைச்சுட்டாங்க. சிவா அவர்களிடமிருந்து தப்பித்து ஓட ஆரம்பிச்சான், போலீஸும் தொரத்தினார்கள். மதுரையில சந்து பொந்து எல்லாம் ஓடி, கடைசியாகத் தமுக்கம் மைதனாத்திற்குள் புகுந்தான். அங்கு மேஜிக் ஷோ நடக்கும் இடத்திற்குள் போனதால், போலீஸால் சிவாவை கண்டுபிடிக்க முடியல.
மேஜிக் ஷோல கலந்துகிட்ட சிவா சைக்கிள ஏறி உட்கார ஆரம்பிச்சான். மேஜிக் நிபுணர் சைக்கிளைப் பார்த்து, "பாஸ் இந்த பையன் எங்கு போகா வேண்டும் என்று நினைக்கிறானோ அங்கு செல்" என்று கூறினான். சிவா கண்ணை மூடி சிங்கப்பூருக்குப் போக வேண்டும் என்று நினைத்தான். கண்ணைத்திறக்க, அழகிய சிங்கபூரை அடைந்தான். இவனுக்கு உற்சாகம் தாங்கல. மீண்டும் கண் இமையை மூட மீண்டும் மதுரைக்கு வந்தான். மேஜிக் ஷோல அனுமதி ஒரு நிமிடம் மட்டும் என்பதால் சிவா வெளியேற்றப்பட்டான்.
போலீஸிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்தச் சைக்கிளை அடைய வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் உதித்தது. இரவு 1 மணி இருக்கும். தமுக்கம் மைதானத்தில் மேஜிக் ஷோ நடத்தவந்தவர்கள் அனைவரும், உறக்கத்தின் உச்சிக்கு சென்றிருந்தார்கள். யாருக்கும் தெரியாமல், அந்தச் சைக்கிளை எடுத்து, தப்பித்து விட்டான் சிவா.
சைக்கிள் கிடைச்சாலும், கிடைச்சுச்சு. இவன் போகாத நாடு இல்ல, பார்க்காத இடமும் இல்ல. திருட்டிப் புத்தி இருப்பதால் வித்தியசாமாக யோசிக்க ஆரம்பிச்சான். பணம் இருக்கிற இடத்திற்கும், நகைகள் இருக்கிற இடத்திற்கும், சென்று அனைத்தையும் கொள்ளை அடித்து, ஊர்த்திருடன் உலகத்திருடன் ஆனான். அனைத்துப் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சைக்கிள் திருடனைப் பற்றிய செய்திகளே வந்தன.
ஆஸ்திரேலியா சிட்னியில் ஒரு வீட்டுல கொள்ளை அடிக்கும் போது, போலீஸ் சுத்திவளைக்க, வசமாக மாட்டிக்கொண்டான். அப்போது நினைத்தான் "எப்படி இருந்தாலும் எனக்கு மரணம் நிகழத்தான் போகிறது, "நிச்சயம் சொர்க்கத்திற்குப் போக மாட்டேன், நரகத்திற்குத்தான் போவேன் இந்தச் சைக்கிள வச்சாவது ஒரு முறை சொர்கத்தைப் பார்த்துவிடலாம்" என்று கண்ணை மூடி நினைக்க, சொர்க்கத்தை அடைந்தான் சிவா. "என்னாட ஆளக் காணமுனு" திகைத்து விட்டனர் ஆஸ்திரேலியா போலிஸ்காரர்கள்.
சொர்க்கத்தில், சைக்கிளிருந்து இறங்கியவுடன், அவனுக்குள் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. ரம்பை, ஊர்வசி, மேனகை கூட்டாக நடனமாடிக்கொண்டு இருந்தார்கள். இவனும் கலந்துகொண்டு சொர்க்கத்தையே கலக்கினான். ரம்பைக்கு மிகவும் பிடித்து, சிவாவின் தோளில் கையை போடா, ஊர்வசிக்கும் மேனைகைக்கும் ரம்பையின் மேல் கோபம். இருந்தாலும் விட்டுக்கொடுத்துவிட்டார்கள் இந்த மன்மதனை. "சரி இனி கிளம்பலாம்" என்று சிவா சைக்கிளில் ஏற, "அத்தான்! உடனே கிளம்ப வேண்டுமா?" என்று ரம்பை சோக குரலில் கூறினாள். "போக வேண்டிய நேரம் வந்திருச்சு ரம்பையே!" என்று கண்ணை மூடி "மதுரைக்குப் போக வேண்டும் "என்று நினைத்து கண்ணைத் திறந்தான் சிவா.
கண்ணைத் திறந்த போதும், சொர்க்கத்தில் தான் இருந்தான். சிவாவுக்கு அடி வயிறு கலங்கிவிட்டது. பத்து முறைக்கு மேல் கண்ணைத்திறந்து மூடினாலும் இவன் நினைத்த இடம் வரல. கண்ணுல தண்ணீர் வந்துருச்சு. திடீர் னு ... யாரோ பேசுற சத்தம் கேட்டுச்சு. யாருனு பார்த்த சைக்கிளிருந்து வந்துச்சு அந்த சத்தம். "சிவா, நான் தான் பாஸ் பேசுறேன் வேற எந்த இடத்திற்குப் போயிருந்தாலும் திரும்பி உங்களக் கூட்டிட்டுப் போயிருப்பேன் ஆனால் நீங்க இங்க வரனுமுனு ஆசைப்பட்டீங்க, சொர்க்கத்திற்கு யாரு வாருவாங்கனு உங்களுக்குத் தெரியாதா ?".
0 கருத்துகள்:
கருத்துரையிடுக