RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

ஆத்திக்காட்டு ராமன்




                            ஆத்திக்காடு கிராமத்திலிருந்து ராமன் படிக்க, திருப்பத்தூர் வரனும். அன்று பள்ளியில் ஓட்டப் பந்தயப் போட்டி நடந்துச்சு. ராமனும் கலந்துக்கிட்டான். நூறு மீட்டர் தூரத்தை 15 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றான். ஆசிரியர்களுக்கு இன்ப கலந்த அதிர்ச்சியாக இருந்துச்சு. இவனின் திறமையை மேலும் செயல்படுத்த, தலைமையாசிரியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்தாரு. அந்த நேரத்தில  ராமனின் அப்பா இறந்துட்டாரு. குடும்பத்தின் சுமை ராமனின் தலையில் விழுந்துருச்சு.  ரெண்டு தங்கைகளையும், அம்மாவையும் காப்பாத்துவதற்காக வேற வழியில்லாம  கட்டட வேலைக்குச் சென்றான். 


                                         ராமனின் தங்கச்சிக வயசுக்கு வந்துருச்சுக. "இதுகல எப்படி கரை சேக்கப் போறேனு" னுகிற வலி ராமன் மனசுல குத்த ஆரம்பிச்சுருச்சு. அந்த நேரத்தில முத்திருளாண்டியப் போயி  ராமன் சந்திச்சான். "ஏதாவது நல்ல சம்பதிக்கிற வேலையா இருந்தா சொல்லுக அண்ணே"னு கேட்டான். நான் பண்றது திருட்டுத்தொழில். "அத செய்வியா"னு முத்திருளாண்டி   கேட்டாரு. முதல திருடுருத்துக்கு பயந்த இவன் பின்னாடி ஒத்துக்கிட்டான். ராமன் அம்மாவிடமும் தங்கச்சிகளிடமும் காரைக்குடிக்கு வேலைக்குப் போவதாகச் சொல்லிட்டு  திருடுவதற்குக் கிளம்பினான். 


                                அன்று தான் முதல் திருட்டு. தனியாக ராமனை  மட்டும் பள்ளத்தூரில் ஒரு வீட்டில் திருடச் சென்னார்கள். முத்திருளாண்டி, பூட்டு ராசா, சண்முகம் ஆகிய மூனு பேரும் தூரத்தில் உட்காந்து அவனை எதிர்பாத்துக்கிட்டு இருந்தாங்க. ராமன் வீட்டினுள் மெதுவாக இருங்கினான். கொஞ்ச நேரத்தில் திடீர்னு போலீஸ் வந்துட்டாங்க.  கையும் களவுமாக பிடிபட, அவர்களைத் தள்ளிவிட்டு, சுவர் ஏறி குதித்து, தப்பித்து ஓடினான், போலீஸீம் விரட்டியது. துப்பாக்கியை எடுத்து குறிப்பார்பதற்குள் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு ஓடி விட்டான். ராமனின்  ஓட்டத்தைக் கண்டு கூட்டாளிகள்  முத்திருளாண்டி, பூட்டுராசா, சண்முகம்  மூனு பேரும் ஆச்சரியப்பட்டுப் போனங்க.


                                       முத்திருளாண்டி ராமனிடம் மன்னிப்புக்கேட்டாரு. "அண்ணே நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறீக"னு ராமன் சொல்ல. "போலீஸுக்கிட்ட சொன்னதே நா தாப்பா, ஒ திறமைய சோதித்துச்சுப் பாத்தோம் நீ ஜெயிச்சுட்டா"னு சொல்லி, செலவுக்குப் பணத்தையும் கொடுத்தாரு. இது போல பல திருட்டு வேலைய தொடந்து செய்தாங்க. 


                                  முத்திருளாண்டி, ராமன் தங்கச்சிகளுக்கு கல்யாணம் நடக்கிறதுனால காணாடுகாத்தான் நகரத்தார் வீட்டுல கொள்ளையடுச்ச அப்புட்டு பணத்தையும், நகையையும்  கொடுத்துட்டுட்டாரு. எவ்வளவு திருடுனாலும் சேத்து வைக்கிற பழக்கம் முத்திருளாண்டிக்குக் கிடையாது.  கிடைச்சப் பணத்தையும் நகையும் வச்சு, தன் ரெண்டு தங்கச்சிகளுக்கும் நல்ல படியா கல்யாணத்தை முடிச்சான் ராமன். பணத்தையும் நகையையும் பாத்த ராமனுக்கு, திருட்டுத் தொழில விட முடியல. தொடர்ந்து திருடிக்கொண்டே இருந்தான்.


                                      முத்திருளாண்டி, ராமனை தூக்கிவச்சுக்கிட்டு ஆடுனாரு.எந்த வீட்டுக்கும் திருடுறதுக்கு முன்னாடி, இப்பயெல்லாம் ராமன்கிட்டதான் யோசனைக் கேட்கிறது. இது சண்முகத்துக்கு கொஞ்சம் கூட புடிக்கல."என்னடா நேந்து வந்தவனுக்கு இம்புட்டு செய்றாரு" என்கிற ஆதங்கம். முத்திருளாண்டிய விட ராமன் திருடுரதுல கில்லாடிய ஆயிட்டான். போலீஸ், ராமன் கூட்டத்தைப் பிடிக்க வலை வீசி  தேட ஆரம்பிச்சாங்க. ஆறு மாதமாகியும் ராமனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க முடியாம, காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆதி உயர் அதிகாரிகளிடம் திட்டுவாங்கினாரு.


                                      இந்த முறை ஒக்கூர் ஆச்சி வீட்டில திருட முடிவ பண்ணாங்க. "எனக்கு ஒரு வேலையிருக்கு முத்திருளாண்டி   நா வரல"னு சொல்லி, சண்முகம் இந்த முறை, திருட்டுல கலந்துக்கல. முகத்துல கருப்புத்துணிய கட்டிக்கிட்டு கொள்ளையடிக்கிறது இவுங்க வழக்கம். அதன் படி இரவு நேரத்தில் வீட்டின் பின்பக்கமாகச் செவர் ஏறி ஒட்டப் பிரிச்சு குதுச்சாங்க. எப்பையும் போல பூட்டு ராசா தன் திறமையக் காட்ட, பீரோவ திறந்து இருக்கிற பணத்தை எடுத்துக்கொண்டிடுந்தார்கள் ராமனும்,  முத்திருளாண்டியும். எதார்த்தமாக ஆச்சி எந்திரித்து லைட்ட போட, மூன்று பேரும் மாட்டிக்கொண்டார்கள். ஆச்சி, "திருடேன் திருடேன் ...."என்று கத்த, ராமன்  சட்டென்று ஆச்சியின் கழுத்தில் கத்தியை வைத்தான். அவனின் முகத்தில் இருக்கிற துணிய இழுத்து முகத்தைப் பார்த்துருச்சு ஆச்சி. உடனே, வச்ச கத்தியால ஆச்சியின் கழுத்தை அறுத்துட்டான்.  முத்திருளாண்டியும் பூட்டு ராசாவும், அந்த இடத்தை விட்டு ஓடிட்டாங்க.  அப்படியே ஆச்சியை கீழேத் தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தான் ராமன். போலீஸிக்குத் தகவல் தெரிந்து அந்த வீட்டில் விசாரனை செய்தார்கள்.


                      "ஏப்பா ராமா! இப்படிப் பண்ணிட்டீயே? இது வரைக்கும் கொள்ளைக்காரங்கனு தான் சொன்னாங்கே, இனி ஊருல கொலைகாரங்கே னுல  சொல்லப் போறங்கே" னு  முத்திருளாண்டி   வேதனைப்பட, "வேணுனு பண்ணல, ஏ முகத்தப் பாக்கவும் பயத்தில என்னை அறியாம நடந்துருச்சுண்ணே"னு ராமன் சொன்னான். "சரி இனி நடக்கிறது ஆண்டவன் கையில"னு  சொல்லிட்டு படுக்கச் சென்றார்கள். ராமனுக்கு அன்று நடந்த சம்பவம், இரவு முழுவதும், உருத்திக்கிட்டே இருந்துச்சு.


                                காலையில் ஒரு முடிவு பண்ணினான் ராமன். "நாளைக்கு திருடப் போறது தான் கடைசித் திருட்டா வச்சுக்குவம்.  ஏதாவது கடவச்சு பொழச்சுக்குலாம்ண்ணே, என்ன சொல்லுறீக"னு ராமன் கேட்க, கொலைக்கு பயந்து,  முத்திருளாண்டி ஒத்துக்கிட்டாரு. அப்ப தான் சண்முகம் வந்தான். நாளைக்கு காரைக்குடி  நகரத்தார்  வீட்ல திருடப் போற விஷயத்தை சொன்னாங்க. "சரி நாளைக்கு வந்துரேன்" னு சொல்லிட்டு சண்முகம் கிளம்பினான். ராமன் மேல் உள்ள கோபத்தில, நாளைக்கு திருடப்போகிற விஷயத்தையும், ஒக்கூர் ஆச்சிய கொன்ட விஷயத்தையும், இன்ஸ்பெக்டர் ஆதிக்கிட்ட போட்டுக்கொடுத்தான் சண்முகம்.


                                 காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆதி, கான்ஸ்டபுள் ஆறுமுகம் உள்பட பத்து பேரு கொண்ட ஒரு தனிப்படை, சண்முகம் கூறியதன் பேரில்   நகரத்தார்    வீட்டை முற்றுகையிட்டாங்க. ராமனை, எப்படிப் பிடித்தலும் மின்னல் வேக ஓட்டத்தால் தப்பித்து விடுவான் என்பதால் ஆங்காங்கே கயிறைக் கட்டி, அதை மண்ணால் மூடிட்டாங்க. அந்த இருட்டில் போலீஸ்காரர்கள் ஒழிந்து கொண்டானர்.


                               மூனுபேரும் சண்முகத்துகாக காத்துக்கொண்டிருந்தார்கள். சண்முகம் வந்த பாடில்லை. அவன் வராததால் ராமனுக்குச் சந்தேகம் வந்துருச்சு. "நம்ம பய அப்படியலாம் செய்ய மாட்டேன் ராமா" னு  முத்திருளாண்டி   சொன்னதுனால ராமன் பெரிசா நினைக்கல. 'சரி வாங்கனு' நகரத்தார் வீட்டை நோட்டம் விட்டார்கள். ஆள் நடமாட்டம் இல்லை என்று தெரிந்தவுடன் வீட்டின் பின்புறச் செவர் ஏறி ஓட்டைப் பிரிச்சு  உள்ளே சென்றார்கள்.பூட்டு ராசா பீரோவைத் திறக்க,ராமன்  நகைகள் எல்லாத்தையும் எடுத்து முடிச்சான். போலீஸ்காரர்களின் பூட்ஸ் கால் சத்தம் கேட்டதால், போலீஸ் வந்ததை அறிந்தான் ராமன்.  முத்திருளாண்டியிடம் நகைகளைக் கொடுத்து, "எப்படியும் மாட்டப்போறோம் நான் முன்னாடி போனா என்னைப் பிடிக்கிறது தான் அவுக நோக்கமா இருக்கும். அப்ப நீங்க தப்பித்து ஓடுறீக" னு சொல்லிட்டு வெளியே ஓடியாந்தான், மறைந்திருந்த  போலீஸ்காரர்கள் கயிற்றைத் தூக்க,  கயிறு தடுக்கி ராமன் கீழே விழ, போலீஸீம் பிடிச்சுருச்சு


                                       இது வரைக்கும் ராமன் பண்ணத் திருட்டுல, பிடிக்க முடியமா மேல் அதிகாரிக்கிட்ட திட்டு வாங்கின ஆதி, "ராமா! இனி ஜென்மத்துக்கும் நீ திருடக்கூடாது, எத்தனை நாளு என்னைய அலைய விட்டுருப்பா வைக்கிறண்டா உனக்கு வேட்டு" என்று சொல்லி ஆத்திக்காட்டு ராமனின் திருட்டுக்கு மட்டும் அல்ல அவனின் ஓட்டத்திற்க்கும் முடிவு பண்ணினான். கை,கால் ரெண்டையும் கட்டிப்போட்டு துப்பாக்கியை எடுத்து காலுக்கீழே, நரம்பு மேலே சுட்டான் ஆதி. சுட்டதுல கால் நரம்பு கட்டாயிடுச்சு. ராமனுக்கு உயிர் இருந்துச்சு தவிர அவன் நடையில உயிர் இல்ல. கோர்ட்ல, 'ஓடும் போது சுட்டேனு 'சொல்லிட்டான் ஆதி.


                                       'ஆத்திக்காட்டு ராமனுக்கு  கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பத்துவருட சிறை தண்டனை' என்ற செய்தி செய்திதாளில் வெளிவந்தது. இதைப் பார்த்த ராமனின் தங்கச்சி வீட்டுக்காரர்,  "உனக்குப் போட்டது திருட்டு நகையா, அப்பவே தெரியும்டி ஒன்னுமில்லாதவனுக்கு ஏது இம்ம்புட்டு பணமுனு, நகைய எடுத்துக்கிட்டு மரியாதயா போயிடு" னு சொல்லி அடிச்சு அவுங்க ஆத்தா வீட்டுக்கு அனுப்பிட்டான். இன்னொரு தங்கச்சி விட்டுக்காரார், நல்ல மனசுங்கிறதுனால, ராமன ஜெயில போய்ப் பாத்துட்டு வந்தாரு. 


                                         போலீஸீக்கிட்ட இருந்து தப்பித்த  முத்திருளாண்டியும் பூட்டு ராசாவும்  நகையை காட்டுல பொதச்சு வைச்சாஙக. அந்த வாரம்  மழை பேஞ்சுக்கீட்டே இருந்துச்சு. முத்திருளாண்டியும் பூட்டு ராசாவும் நகைகளை பொதச்ச எடத்தில வந்து பார்ந்தாங்க மழைனால, மண்ணு அனைத்தும்  அந்த இடத்தில வந்து சேர்ந்திருச்சு. பொதச்ச இடமே தெரியாம போயிருச்சு. கடைசி காலம் வரைக்கும் நகையை கண்டு பிடிக்காமலே செத்துட்டாங்க.

2 கருத்துகள்:

பாரதி சொன்னது…

Nice

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
அருமையான எழுத்து நடை.
வாழ்த்துகள்.
Please avoid Word Verification.

கருத்துரையிடுக

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy