RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

தொடர் கதை 
.....................






ரங்கராஜன்  மாதிரி தெரிகிறதுஒரு நாள் தான் பாக்கல. முகமே மாறி போச்சு.ஏன் இப்படி  சோகமாக நடக்கிறார். அவருக்கு நேற்று என்ன நடந்ததோ?. கண்ணுல  வேற தண்ணீர் வருதேஎன்ன நடந்து வந்தவர்  திடீரென்று அந்த ரயில் தண்டாவாளத்தில் ஏன் தலையை வைக்கிறார். என்ன கஷ்டமோ? யாரோ ஒரு புண்ணியவான் ஒடியாரன். அட நம்ம சங்கரு. தூரத்தில் ரயில் வேற  வருதே .. சங்கர்  கூப்பிட கூப்பிட  வரமாட்டிங்கிறார். வயதான காலத்தில்  ரங்கராஜன்  ஏன் வீம்பு பண்றார். அவர் மேல் இரக்கப் பட்டு காக்கா கூட கரைகின்றது பாருங்கோ. பாவி மனுசா! அப்படி என்ன தலை போகிற காரியம் நடந்து போச்சு. பிரச்சினைக்கு மரணம் தான் தீர்வென்றால் எவனும் உசுரோட இருக்க முடியாதுனு தெரியாதா?. அய்யோ! ரயில் கிட்ட வந்துருச்சு.......... அப்ப ரங்கராஜன்  கதி? இதெல்லாம் என்னால பாக்க முடியாது.கண்ண மூடிட்டேன்நல்ல வேளை சங்கர்  காப்பத்திட்டான். அவரை  தரத்தரனு இழுத்ததில் பாவம் காலில் காயம் ஏற்பட்டுருச்சு. ரத்தம் பொழ பொழனு கொட்டுது. கர்சீப்ப கிழிச்சுக் கட்டுறான் சங்கர் . 'இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சினை'னு  கேக்குறான்.அதுக்கு பதில் சொல்றார்.'கை நீட்டி  அடிச்சிருந்தாக் கூட தாங்கியிருப்பேன். எம்மவன்  பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கைப் பாக்குறான். பசிக்குதுனு நானா போய் ரெண்டே ரெண்டு  இட்லிய எடுத்து தின்னேன் தம்பி. 'இதத் திங்கிறதுக்கு ரோட்டுல கெடக்கிறத திங்க வேண்டியதுதானே. பச்சைபிள்ளை ஒண்ணுயிருக்கு, அறிவில்லயா?'னு எம் மருமக கேட்டுப்புட்டா.இதுக்கு மேலயும் இந்த உசுரு இருந்தா என்ன? செத்தா என்ன?'  என்றவாறு  சங்கரிடம் பொலம்புகிறார். அவரு கதையை கேட்டு இவன் கண்ணுல தண்ணீர் வருகிறது. இவன் ஏன்  திடீர்னு ஓடுறான். இப்ப, தம்பி ..தம்பினு  ரங்கராஜன்  கூப்பிட, சங்கர் வேகமாக போறான்நிறுத்தியிருந்த பைக்க எடுத்துட்டான். வீட்டுக்கு தான் போகிறான் போல. என்ன வேகமாகப் போறான். காத்து பலமா அடிக்கிறது. மழை பெய்கிற மாதிரி தெரிகிறது.   ஆமா ! மழையே தான்.நனஞ்சுக்கிட்டே போறான். ஒரு வழியா வீட்டுக்குப் போயிட்டான். அவன்   வேகமா ஒடியாறதப் பாத்து மனைவி வனிதா பதறிட்டா.... என்னங்க என்னங்கனு கத்துறா, ஒரு நிமிடம் நின்றவன். வனிதாவின்   இரண்டு கன்னத்திலும் பளார் பளார்னு அறைகிறான். அவள்  கண்ணிலும் கண்ணீர். அப்படியே உள்ளே போகிறான். அவன் கண்கள் யாரையோ தேடுகிற மாதிரி தெரிகிறது. அந்த கடைசி அறைக்குப் போனதும் அப்படியே  நிக்கிறான். யாரோ படுத்துயிருக்காங்க. ! அவனுடைய  அப்பா கைலாசம்னு  நினைக்கிறேன். ஏன் பரிதாபமாக படுத்து இருக்கிறார். முகத்தில் உட்கார்ந்து போவது  தெரியாமல் கூட உறங்குகிறார்.
கிட்டப் போறான். அவனுடைய கை, அவரின் மூக்கு நோக்கி போகிறது. மூச்சு இருக்கானு பாக்குறான் போல .
தொடரும்.....


நல்ல சீன்ல முடுச்சுட்டாங்களே..
நேத்து ஒரு நா நாடகம் பார்க்கல. அதுக்கு இப்படி பொலம்ப விட்டுடாங்கே...
அடியே!சித்திரா. இந்த டிவி பொட்டிய கொஞ்சம்  அமத்துடி . பாவம். கைலாசம் போயிட்டாரோ ? இருக்காரோ ?

கதைக்களம் ராஜசேகர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy