RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

தொட்டில் குழந்தை


              செல்வி வறுமையில பிச்சை எடுக்க ஆரம்பிச்சா, காலச் சூழ்நிலைநால நிரந்திரத் தொழிலா வச்சுக்கிட்டா. அழுக்குச் சீல, கிழிஞ்ச சாக்கெட் உடம்புல உடுத்தி இருந்தாலும் முக லட்சணமா இருப்பா. இவமுகத்தப் பார்த்துப் பிச்சைப் போட்டவங்க தான் அதிகம்.  வெள்ளி,செவ்வாய் கோயில்களிலும் மற்ற நாளுல தெருவுலையும் பிச்சை எடுப்பா. சில சமயம் யாரவது சாப்பாடு போட்டாலும் வாங்கிக்குவா.


            செல்வி மேல ஒரு கண்ணு, சாமிக்கன்னுக்கு. தன் வீட்டுக்குப் பிச்சை எடுக்க வரும் போதெல்லாம் மிச்சம் மீதி சாப்பாட்டை போடுவான். மனிதபிமானத்தில இல்ல அவளை அடையுனுங்கிற ஆசையில. சாமிக்கண்ணு பொண்டாட்டி சித்ராவும் சாப்பாடு போடுறதுக்கு ஒன்னும் சொல்ல மாட்டா.  செல்வி மேல மட்டும் இல்லை யாரு உதவினு கேட்டாலும் செய்யுறதுல்ல பாரி வள்ளல். எப்படா? வாய்ப்பு வாருமுனு காத்துக்கிட்டு இருந்தான் சாமிக்கன்னு.



                வாய்ப்பும் வந்துச்சு. தன் மனைவி வெளியூர் போன சமயம். "உங்க அக்கா வீட்டில இல்ல ஏகப்பட்ட சோறு மிச்சமாப் போச்சு வந்தா வீட்டுப்பக்கம் வாமா " என்று ரோட்டில பார்த்து சாமிக்கண்ணு சொல்ல, அதையும் நம்பி வீட்டுக்கு போனாள் செல்வி. வயிறு நிறைய சாப்பிட போனவளுக்கு வயிறுல விதையை விதச்சு அனுப்பிவிட்டான். ஒவ்வொரு மாதமும் கடக்க செல்வி வயிற்றுல விதைச்ச விதை மொளைக்க ஆரம்பிருச்சு. ஊருக்குள்ள யாரும் இப்ப பிச்சை போடுறது இல்ல. "எவனுக்கிட்டயே போயி வகுத்த நிறைச்சுக்கிட்டு வந்துட்டா" னு சொல்லி யாரும் சாப்பாடும் போறதுமில்ல, காசும் கொடுக்கிறதுமில்ல. கோயில போடுற சாப்பாடும், தெருக்குழாய் நீரும் தான் இப்போதைக்கு அவள் பசியை ஆத்துச்சு. 


              அன்று இரவு செல்விக்கு இடுப்பு வலி வந்துருச்சு. எந்தப் பிரச்சனையும் இல்லாம               பெத்து எடுத்தா ஆம்புளப் பிள்ளையை. குழந்தைக்குப் பசி தாங்காம கத்த, தன் மார்புகளால் பால் கொடுத்தா செல்வி. சட்டியில இருந்தத்தான அகப்பையில வரும்ங்கிற மாதிரி ஆயிடுச்சு செல்வி பால்கொடுத்த கதை. ஊருக்குள்ள இவளப் பத்தி தப்பா பேசுனாங்களைத் தவிர யாரும் உதவி செய்ய முன் வரல.  "உன்னை வளத்து இதுக்கு மேல ஒரு பாவத்தை சாம்பாதிக்க விரும்பல" னு சொல்லி தன் குழந்தையை பிள்ளையார் கோவில் அருகே ரோட்டு ஓரமா இருக்கிற குப்பைத்தொட்டிக்கிட்ட போட்டுட்டு நடைபிணமா நடக்க ஆரம்பிச்சா. பசி தாங்காம குழந்தை கத்துனது, மழையில்லாம தவிச்ச பயிரப் போல இருந்தது. 


            கொஞ்ச நேரத்தில், அந்த ரோட்டில் ஒரு காரு வந்து நின்றது. பக்கத்தில இருக்கிற பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட, காருல இருந்து இறங்கினாங்க ரெண்டு பேரு. அப்படியே கோயிலுக்குள் சென்றனர். எதோ சத்தம் கேட்குதுனு காருக்குள்ள இருந்த பப்பி நாய் வெளியே எட்டிப்பார்த்துச்சு குப்பைத் தொட்டியை நோக்கி. 


காருக்குள் இருந்த பப்பி நாயி கீழ் இறங்கி குப்பைத்தொட்டியில் இருக்கும் குழந்தையின் அருகே சென்று குழந்தை அழுவதை பார்த்துக் கொண்டிருந்த்து. கோவிலில் இருந்து திரும்பிய அந்த ரெண்டு பேரும் காருக்குள்ள பப்பி நாயக் காணமுனு தேடிப் பார்க்க, குப்பைத் தொட்டிக்கு அருகே இருப்பதைக் கண்டு பெரு மூச்சு விட்டனர்.

எப்பவும் கூப்பிட்டவுடன் வரும் பப்பி பலமுறை கூப்பிட்டும் வரவில்லை. ஆதலால் தொட்டிக்கு அருகிலேயே சென்று இருவரும் வற்புறுத்தித் தூக்கிட்டு வந்தனர். காரில் ஏறும் வரை பப்பி நாய், அந்தக்குழந்தையை பார்த்துக்கொண்டே இருந்தது .



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy