RSS
Hello! Welcome to this blog. You can replace this welcome note thru Layout->Edit Html. Hope you like this nice template converted from wordpress to blogger.

மெட்ராஸ் மேட்னி


மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஒரு பார்வை 

 சில கனவுகள் ஒரே நாளில் நடந்துவிடலாம் ... சில கனவுகள் பல வருடங்கள் ஆகலாம்...   இப்படி என் கனவுகள் பற்றி கடந்தவாரம் எதிர்வீட்டுகார ர்களிடம்  பேசிக் கொண்டிருந்தோம்..  
"அக்கா , ராஜேஸ்வரி சினிமாஸ்னு  ஒரு தியேட்டர் கட்டனும் அதில் நான் என் மனைவி பையன் மூன்று பேரும் தனியா உட்கார்ந்து படம் பாக்கனும்க்கா னு சொன்னேன். 

 கடந்த ஞாயிறு அன்று  காலை 11 மானிங் ஷோ தான் என்றாலும் பெரம்பலூர் ஸ்வாதி தியேட்டர் சென்று மெட்ராஸ் மேட்னி படத்திற்குப் போனோம்... 
எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் போனோம்.. படம் பிடித்திருந்தது எனக்கு. குடும்பக்கதை என்பதாலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மோடு பொருத்திப் பார்க்கிற படமாக மெட்ராஸ் மேட்னி இருந்தது...  எளிமையான குடும்ப பின்னணிகளைக்  கொண்ட படங்கள் அரிதான இந்தக் காலக்கட்டத்தில் மெட்ராஸ் மேட்னி சினிமா பிரியர்களுக்கு ஒரு வரம்.....

 கதையோ  காட்சியோ பெரிதாகவோ பிரமாண்டமாகவோ இல்லை என்றாலும் ரசிக்கும் படியாக இருந்தது தான் படத்திற்கு பிளஸ்... 

எழுத்தாளராக கதை சொல்லியாக வரும் சத்யராஜ் பின்னனி குரலுடன் படத்தை நகர்த்துகிறார்... 
ஆட்டோ ஒட்டிக்கொண்டு தந்தை கதாபாத்திரத்தில் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் காளிவெங்கட். ஐடி வேலை, அமைதியான திருமணமாகாத  மகளாக வரும் ரோஷினி ஹரிப்ரியனின்  பொறுப்பான கதாபாத்திரம் மனதை ஈர்க்கிறது..  நாய்க்குட்டியை வளர்க்கும் மகன் விஷ்வா நடிப்பு  எதிர் வீட்டு தம்பியை ஞாபகப்படுத்துகிறது. அரசியல்வாதியாக வரும்  கீதா கைலாசம் ஏற்றுக்  கொண்ட பச்சோந்தி கதாபாத்திரம் மற்றும் ராமர்  பேசும் வசனங்களும் சிரிக்கவும்  ரசிக்கவும்  வைக்கிறது.  வீட்டில் வளர்க்கும் நாய் மின்சார வயர் அறுந்து இறக்கும் காட்சியிலிருந்து படம்  கவனம் பெறுகிறது.
கார் பயிற்சி ஓட்டுநராகவரும் ஜார்ஜ் மரியனின் நடிப்பில் காமெடியும் ரசிக்கும் படியாக இருக்கிறது. 
முடிவில் வீட்டில் எல்லோரும்  ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சியை பார்த்த போது மனம் ஏதோ பண்ணியது. 
டூரிஸ்ட் பேமிலி படம் கூட சில காட்சிகள் எதார்த்தங்களை  மீறி இருக்கும்.. ஆனால் இப்படம் அதிலிருந்து வேறுபட்டு இருக்கும்... 
படத்தின் இடைவேளை முன்பு திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் .... இடைவேளைக்கு பின் காட்சியை  நகர்த்திய விதங்களில் படம் சுவாரஸ்யத்தைத் தருகிறது....
இயக்குநர் கார்த்திகேயன் மணி மற்றும் 
படக்குழுவினருக்கு  மனமார்ந்த வாழ்த்துகள்....

தியேட்டர் கட்ட வில்லை என்றாலும் கனவுகள் உடனே நிறைவேறியது... ஆமாம்..
பெரம்பலூர் சுவாதி திரையரங்கில் நான் மனைவி மகன் மூன்று பேரும் மட்டுமே அமர்ந்து படத்தை கண்டுகளித்தோம்...பார்வையாளர்கள் வேறு யாரும் இல்லாத தியேட்டரில் 
பயத்தோடும் பரவசத்தோடும்....

அப்பா


அப்பா

அவனுடைய அப்பா கல்லூரியில் படிக்கும் போது அவன் வைத்த ஆறு அரியருக்காக முகத்தைச் சுருக்கிக் கொண்டு எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார்.
எப்படியோ அவனுக்கு ஞானம் வந்து அஞ்சு செமஸ்டர் கழித்து ஆறு அரியரை முடித்தான்.
'அண்ணன்களைப் போல் படிச்சு வேலைக்குப் போ' என எப்போதும் அவனை திட்டியதால் அவனுக்கு அப்பா எதிரியாகவே தெரிந்தார்.
ஒரு நல்ல நாளில் அண்ணன்களின் உதவியோடு   அவன் கௌவர்மென்ட் வேலைக்குப் படிக்கத் தொடங்கினான்.
திட்டித் தீர்த்த அப்பா. பிள்ளை படிப்பதைப் பார்த்து 'இப்பதான் பிள்ளைக்கு புத்தி வந்திருக்கு 'எனத்
தனக்குத் தானே பேசிக்கொண்டார்.
கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியர் யாரோ இவன் பேப்பரை திருத்தினார்களோ ?என்னவோ ?
வரிசையாக கௌவர்மென்ட் வேலைக்கு எழுதின எக்ஸம் நான்கும் போயிருச்சு.
என்னத்த படிச்சுக் கிழிச்ச? மீண்டும் அவனை திட்டத் தொடங்கினார். ஆனால் அம்மா ஆறுதல் சொன்னார்.
முட்டி மோதி படிச்சு அவனுக்கு கௌவரமெண்ட் வேலையும் கிடைத்தது.
அப்பா மகிழ்ச்சி அடைந்தார்.
'எம்பிள்ளை டா நீ . பின்ன பாஸ் பண்ண மாட்டியா?' என சட்டைக் காலரை தூக்கி விட்டுப் பெருமிதப் பட்டார்.
முதல் நாள் அலுவலகம் கிளம்பினான் அவன்.
டே !இங்க வா ? அதட்டலாக அழைத்தார் அப்பா.
பயங்கலந்த குரலில் 'என்னங்கப்பா' என்றான்.
'சட்டையக் கழட்டு. சுருங்கி இருக்குல்ல. தேச்சுப் போடுறதில்லையா ? 'என்றார்.
பொறுமையாக அயன் பாக்ஸை எடுத்து அப்பா தேய்த்த போது,

சட்டையின் சுருக்கத்தோடு அப்பாவின் முகத்திலும் சுருக்கம் போயிருந்தது.

ப.ராஜசேகர்.


 
Copyright 2009 கதைக்களம். All rights reserved.
Free WordPress Themes Presented by EZwpthemes.
Bloggerized by Miss Dothy